தூத்துக்குடி, அக்டோபர் 5
சசாயா மாதா ஆலய பங்கு மற்றும் SR இருதய சிகிச்சை மையம் (SR HEART CARE) இணைந்து இன்று மாபெரும் இலவச பொதுமருத்துவம் மற்றும் இருதய பரிசோதனை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

காலை 8.30 மணி முதல் லயன்ஸ் டவுண் பகுதி சகாய மாதா ஆங்கில பள்ளி வளாகத்தில் (கோவில் அருகில்) நடைபெற்ற இம்முகாமில் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு பல்வேறு பரிசோதனைகளில் ஈடுபட்டனர்.

இந்த இலவச இருதய மருத்துவ முகாமில் :-

1. இரத்த அழுத்தம் (BP)

2. ECG பரிசோதனை

3. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு (Random Blood Sugar)

4. இரத்தத்தில் உள்ள கொழுப்பு அளவு (Lipid Profile)
எனும் பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டன.

இதய நலன் குறித்த ஆலோசனைகளையும், தேவையான மருந்து வழிகாட்டுதல்களையும் நிபுணர்கள் வழங்கினர்.

முகாமை டாக்டர் ஆர். சஹாயா ஃப்ரான்சிஸ் அகிஸ்டன், M.B.B.S., M.D., (Gen. Med.), D.M., (Cardiology) தலைமையில் SR HEART CARE சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டது.

இலவச மருத்துவ முகாமை லயன்ஸ் டவுண் சகாயா மாதா ஆலய பங்கு தந்தை பிரதீபன் தொடங்கி வைத்தார்.

இந்த முகாமின் மூலம் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பயனடைந்தனர். இதய நோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இம்முகாம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.