கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற சமீபத்திய சம்பவம் தொடர்பாக, பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்கள் வழியாக தெரிவித்து விமர்சனம் செய்ததற்காக அவர்கள்மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அரசியல் சட்டம் மக்கள் அனைவருக்கும் கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் மற்றும் விமர்சன உரிமை ஆகிய அடிப்படை உரிமைகளை வழங்கி இருப்பதை நினைவுபடுத்தி, இதனை மீறி நடவடிக்கை எடுப்பது மக்கள் அடக்குமுறைக்கு ஒப்பானது என மக்கள் நல உரிமை அமைப்பின் அமைப்பாளர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
“நீதிமன்ற விசாரணை நிலுவையில் உள்ள விவகாரத்தை முன்னிட்டு ஆளுங்கட்சியைத் தவிர்த்து அப்பாவி மக்கள்மீது வழக்கு பதிவு செய்வது முற்றிலும் தவறு. இது மக்கள் உரிமைகளை மீறும் செயல். பொதுமக்களின் குரலை அடக்குவது ஜனநாயகத்திற்கு எதிரானது. நீதிமன்ற விசாரணை நடந்து வரும் நிலையில் அரசியல் அழுத்தம் இல்லாமல் உண்மையான நீதியை நிலைநாட்ட வேண்டும்” என்றார்.
அவர் இந்த நடவடிக்கை குறித்து தீவிர கவலை தெரிவித்ததுடன், மக்கள் மீது பொய் வழக்குகளை உடனடியாக வாபஸ் பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
தூத்துக்குடி
கரூரில் மக்கள் மீது பொய் வழக்கு – அடக்குமுறையா? அடிப்படை உரிமை மீறல் என மக்கள் நல உரிமை அமைப்பு கண்டனம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பொது மக்களின் கோரிக்கைக்கு பதிலளித்த மேயர் – சண்முகபுரம் வடிகால் விரைவில் நீட்டிப்பு!!
அடுத்த
லயன்ஸ் டவுன் பரிசுத்த சசாயா மாதா ஆலய பங்கு மற்றும் SR இருதய சிகிச்சை மையம் (SR HEART CARE) இணைந்து இலவச இருதய பரிசோதனை முகாம் – நூற்றுக்கணக்கானோர் பயன்பெற்றனர்!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026