தமிழர்களின் நில வாழ்வும் பண்பாட்டும் இணைந்த பாரம்பரிய மாடுகளை காக்கும் நோக்கில் தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன், சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பதிவு செய்த வீடியோவும் புகைப்படமும் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
“மண்ணுல விதை விதைக்க மாட்டையே நம்பி இருப்போம்… தெய்வமா அத தொழுது நெற்றியில் பொட்டு வைப்போம்… ஏர் ஓட்ட மாடு இருந்தா ஏழையே இல்லையடா” என்ற வரிகளை உருக்கமாகப் பகிர்ந்த அவர், தமிழர் வாழ்க்கைமுறையில் மாட்டு இனங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
மாடு அருகில் நின்றபடி அவர் பதிவுசெய்திருக்கும் புகைப்படத்தையும், பாரம்பரிய மாடுகளை காப்பதன் அவசியத்தை எடுத்துரைக்கும் விழிப்புணர்வு வீடியோவையும் தனது வாட்ஸ்அப் தளத்தில் பகிர்ந்துள்ளார். இதனால் இளைஞர்கள் மத்தியில் பாரம்பரிய மாட்டு இனங்களை பாதுகாப்பது குறித்த ஆர்வம் அதிகரித்துள்ளதாக சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் எழுந்துள்ளன.
தமிழர் பண்பாட்டு மரபை பாதுகாப்பதில் அனைவரும் பங்கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர் மேற்கொண்ட முயற்சி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தூத்துக்குடி
தமிழர் பாரம்பரிய மாட்டை கொண்டாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ASP நடவடிக்கையில் காயம்: மூச்சுத்திணறலால் இந்து முன்னணி செயலாளர் மருத்துவமனையில் அனுமதி!!
அடுத்த
“4 ஆண்டு பசுமை போராட்ட வெற்றியை கொண்டாட வந்தவர்… கேக் வெட்டுவதற்கு முன்பே போலீஸ் கூட்டிச் சென்ற பரபரப்பு!”
இதையும் படிக்கலாம்
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு CITU போராட்டம்!!
10 Jul 2026