தூத்துக்குடி மாவட்ட இந்து முன்னணியின் சார்பில், திருப்பரங்குன்றத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி கார்த்திகை தீபம் ஏற்றுவதைக் தடை செய்த இந்து சமய அறநிலையத் துறையை கண்டித்தும், தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

தூத்துக்குடியில் நடைபெற்ற இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தின்போது, துணை கண்காணிப்பாளர் மேற்கொண்ட தாக்குதலில் தெற்கு மாவட்ட செயலாளர் அருணாசலம் உடல்நலக்குறைவுக்கு ஆளானார். தாக்குதலுக்கு பின் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக அவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் மாவட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், இந்து முன்னணி அமைப்பினர் போலீஸ் நடவடிக்கையை கண்டித்து மேலும் போராட்டங்கள் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.