சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார், விசாரணை என்ற பெயரில் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில் தொடர்புடைய திருப்புவனம் குற்றப்பிரிவு போலீசார் பிரபு, ஆனந்தன், கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அஜித்குமாரின் மரணத்திற்கு நீதி கேட்டு, மக்கள் நல உரிமை அமைப்பாளர் வழக்கறிஞர் அருணாதேவி ரமேஷ்பாண்டியன் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “மடப்புரம் கோவில் காவலாளியான அஜித்குமாரை விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று அடித்து சித்திரவதை செய்து கொலை செய்ததாகக் கூறப்படும் போலீஸாருக்குத் அதிகபட்சமாக தண்டனை கிடைத்திட தமிழக அரசு ஆக்கப்பூர்வமான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இச்சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் மதுரை கிளை உயர் நீதிமன்ற நீதி அரசர் எஸ்.எம். சுப்பிரமணியம் துரித மற்றும் சட்டப்படியான உத்தரவுகளால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் அருணாதேவி ரமேஷ்பாண்டியன் குறிப்பிட்டுள்ளார்.
நீதியரசர் சுப்பிரமணியத்தின் நடவடிக்கைகள் இந்த வழக்கில் நீதியை நிலைநாட்டும் என்ற நம்பிக்கையை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி
லாக்கப்பில் உயிரிழந்த அஜித்குமார் வழக்கில் போலீசாருக்கு அதிகட்சமான தண்டனை கிடைத்திட தமிழக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் வலியுறுத்தல்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
திருச்செந்தூரில் ஜூலை 7ம் தேதி குடமுழுக்கு விழாவையொட்டி தூய்மை பணியை மேற்கொள்ள தூத்துக்குடி மாநகராட்சியிலிருந்து 50 தூய்மை பணியாளர்கள் செல்லும் வாகனத்தை மேயர் ஜெகன் பொியசாமி கொடியசைத்து வழியனுப்பி வைத்தாா்!!
அடுத்த
தூத்துக்குடியில் சமூகநலத்துறை அமைச்சரும், மீன்வளத்துறை அமைச்சரும் கூட்டாக அளித்த பேட்டியில் சொன்ன தகவல்!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026