கருங்குளம் ஊராட்சி ஒன்றியம், வடக்கு காரசேரி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.13.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாய விலைக்கடையும், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.10.19 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டிடமும் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறுமுகராஜா நயினார், ஜான்சிராணி, உதவி பொறியாளர் தளவாய், பணி மேற்பார்வையாளர் சிவகுமார், வட்டார வழங்கல் அலுவலர் சகிலா, வருவாய் ஆய்வாளர் கவிதா, ஒன்றிய கழக செயலாளர் சுரேஷ்காந்தி, இளைஞரணி நிர்வாகிகள் ராஜாமணி, கொம்பையா, மகளீரணி கனகா, கிளை செயலாளர்கள் நம்பி, முருகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பேச்சியம்மாள், கூட்டுறவு சங்க தலைவர் அய்யம்பெருமாள், பொட்டாலூரணி ராஜதுரை, ஊராட்சி செயலர் அஞ்சலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து கருங்குளம் ஊராட்சி ஒன்றியம், வட வல்லநாடு ஊராட்சி, விளாத்திகுளம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கலையரங்கம் திறந்து வைக்கப்பட்டது. மேலும் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில் பணிபுரியும் பொதுமக்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டு அறிந்தார்.

இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறுமுகராஜா நயினார், ஜான்சிராணி, உதவி பொறியாளர் தளவாய், பணி மேற்பார்வையாளர் சிவகுமார், வருவாய் ஆய்வாளர் மாதவன், கிராம நிர்வாக அலுவலர் ரம்யா, ஒன்றிய கழக செயலாளர் சுரேஷ்காந்தி, ஒன்றிய பொறியாளர் அணி அமைப்பாளர் பிரபு, இளைஞரணி கொம்பையா, கிளை செயலாளர் முருகன், ஊராட்சி செயலர் சங்கர் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.