கருங்குளம் ஊராட்சி ஒன்றியம், வட வல்லநாடு ஊராட்சி, விளாத்திகுளம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை கட்டும் பணிகளுக்கு ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில் பணிபுரியும் பொதுமக்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து, பணிகளின் முன்னேற்றம் மற்றும் தேவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறுமுகராஜா நயினார், ஜான்சிராணி, உதவி பொறியாளர் தளவாய், பணி மேற்பார்வையாளர் சிவகுமார், வருவாய் ஆய்வாளர் மாதவன், கிராம நிர்வாக அலுவலர் ரம்யா, ஒன்றிய கழக செயலாளர் சுரேஷ்காந்தி, ஒன்றிய பொறியாளர் அணி அமைப்பாளர் பிரபு, இளைஞரணி கொம்பையா, கிளை செயலாளர் முருகன், ஊராட்சி செயலர் சங்கர் உள்ளிட்டோர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.