கருங்குளம் ஊராட்சி ஒன்றியம், வட வல்லநாடு ஊராட்சி, விளாத்திகுளம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை கட்டும் பணிகளுக்கு ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில் பணிபுரியும் பொதுமக்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து, பணிகளின் முன்னேற்றம் மற்றும் தேவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறுமுகராஜா நயினார், ஜான்சிராணி, உதவி பொறியாளர் தளவாய், பணி மேற்பார்வையாளர் சிவகுமார், வருவாய் ஆய்வாளர் மாதவன், கிராம நிர்வாக அலுவலர் ரம்யா, ஒன்றிய கழக செயலாளர் சுரேஷ்காந்தி, ஒன்றிய பொறியாளர் அணி அமைப்பாளர் பிரபு, இளைஞரணி கொம்பையா, கிளை செயலாளர் முருகன், ஊராட்சி செயலர் சங்கர் உள்ளிட்டோர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
விளாத்திகுளம் கிராமத்தில் பயணிகள் நிழற்குடை: அடிக்கல் நாட்டிய எம்.சி.சண்முகையா எம்எல்ஏ – தேசிய வேலை உறுதி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கருங்குளம்–விளாத்திகுளம் வளர்ச்சி பணிகள்: புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார் ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ எம்.சி.சண்முகையா!!
அடுத்த
வீரத் தியாகத்தின் நினைவில்… சுதந்திரப் போராட்ட வீரர் கே.எஸ். முத்துசாமி ஆசாரி 53வது நினைவு தினம் அனுசரிப்பு!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026