தூத்துக்குடி மாநகர பகுதியில் திமுக இளைஞர் அணி செயல்வீரராக பணியாற்றிய விக்னேஷ் – ஆஷா தம்பதியரின் திருமணம், பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு தூத்துக்குடி 4ம் கேட் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

உற்றார், உறவினர்கள், நண்பர்கள் உற்சாக வரவேற்புடன் கலந்து கொண்ட இந்த திருமண விழாவில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் தூத்துக்குடி மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு மணமக்களை நேரில் வாழ்த்தினார்.

மேலும், மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் ஜான் அலெக்ஸாண்டர், அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், வட்டச் செயலாளர் ரவீந்திரன், மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க மாவட்ட தலைவர் ஜெபராஜ், மாநகர திமுக சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் மகேஸ்வரன் சிங், வணிக அணி துணை அமைப்பாளர் வேல்பாண்டி, பகுதி அணி அமைப்பாளர் செல்வம், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜெஸ்பர் உள்ளிட்ட பல்வேறு அணி நிர்வாகிகள், வியாபாரிகள் மற்றும் பொதுநல அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.