தூத்துக்குடி மாவட்டம் கூட்டுடன்காடு ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.14.31 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டடமும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் நட்புப் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.17.16 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பள்ளி வகுப்பறைக் கட்டடமும் இன்று (22/11/2025) திறந்து வைக்கப்பட்டது.
இந்த இரு புதிய கட்டடங்களையும் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்ப திறந்து வைத்தார்.
நிகழ்வில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
கூட்டுடன்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிறுவர் சிறுமிகளின் கல்வி மற்றும் நலன் மேம்பாட்டிற்கு இந்த புதிய வசதிகள் பெரிதும் உதவும் என பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
தூத்துக்குடி
கூட்டுடன்காடு ஊராட்சியில் அங்கன்வாடி மையம் மற்றும் புதிய பள்ளி கட்டடத்தை கனிமொழி எம்பி திறந்து வைத்தார்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விளாத்திகுளம் புதூர் பள்ளி மாணவி பாலியல் சீண்டல் வழக்கில் குற்றவாளி ஆசிரியரை உடனே கைது செய்ய வேண்டும் – தமிழ்நாடு மக்கள் நல இயக்கம் கோரிக்கை!!
அடுத்த
தூத்துக்குடியில் வேலைவாய்ப்பு முகாம் : தேர்வானவர்களுக்கு கனிமொழி கருணாநிதி நியமன ஆணைகள் வழங்கல்!!
இதையும் படிக்கலாம்
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு CITU போராட்டம்!!
10 Jul 2026
மாணவர்களின் தலைமைத்துவ பயணத்திற்கு புதிய தொடக்கம் – ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் மாணவர் பேரவை துவக்க விழா கோலாகலம்!!
10 Jul 2026
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026