தூத்துக்குடி மில்லர்புரம் புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார் நிறுவனங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்த முகாமை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி நேரில் பார்வையிட்டு, நிறுவனத் தேர்வில் வெற்றி பெற்ற இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்தினார்.

முகாம் மூலம் பல இளைஞர்கள் புதிய வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ள நிலையில், இத்தகைய முயற்சிகள் இளம் தலைமுறையின் வளர்ச்சிக்கும், மாவட்டத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் துணைபுரிகின்றன என அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சி அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெற்றது.