கர்ம வீரர், கல்வியின் தந்தை என போற்றப்படும் முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் 50-வது நினைவு தினம் இன்று (அக்டோபர் 2) அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி தூத்துக்குடி அந்தோணியார் கோவில் அருகே அமைந்துள்ள காமராஜர் திருவுருவ சிலைக்கு, பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் நிறுவனர் தலைவர் எஸ். பி. மாரியப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைப்பின் பொருளாளர் செல்வகுமார், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் முருகன், இளைஞர் அணி தலைவர் சிவா, நட்டத்தி ஒன்றிய செயலாளர் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

பெருந்தலைவர் காமராஜரின் கல்விக்கான தியாகமும், மக்களுக்கான அரசியல் பணியும் நினைவுகூரப்பட்டு, அவரின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என்ற உறுதியுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.