தூத்துக்குடியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, 3-வது மைல் பகுதியில் நடைபெற்ற மரியாதை நிகழ்வில் பெருந்திரளான மக்கள் திரண்டனர். இதனால் பாளைரோடு பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அந்நேரத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலேரும் பெருமாள் தன்னுடைய வேகமான நடவடிக்கையால் நெரிசலை சில நிமிடங்களில் சரிசெய்து, வாகன ஓட்டிகளுக்கு சிரமம் இல்லாமல் போக்குவரத்தை சீர்படுத்தினார்.

அவரின் அர்ப்பணிப்பு மற்றும் திறமையான பணியை பாராட்டி பொதுமக்கள், “சேவையே சிறப்பு காட்டும் அதிகாரி” என புகழ்ந்தனர்.