தூத்துக்குடியில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் கிஷோர்குமார் தலைமையில் மாலை அணிவித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது.

சட்டமேதை அம்பேத்கரின் 135 வது பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் இன்று (14.04.2025) இந்திய மாணவர் சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கிஷோர்குமார் தலைமையில் தெற்கு காவல் நிலையம் அருகே அமைந்துள்ள அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து இந்திய மாணவர் சங்கத்தின் நிர்வாகிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

நிகழ்வில் செயற்குழு உறுப்பினர் ராம்குமார், மற்றும் நிர்வாகிகள் ஷாம், ராஜ், கணேசன் உள்ளிட்டு பல மாணவர்கள் கலந்து கொண்டனர்.