தூத்துக்குடி காதி கிராப்ட் அங்காடியில் இன்று (02.10.2025) தீபாவளி கதர் சிறப்பு விற்பனைக்கு தொடக்க விழா நடைபெற்றது.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் மற்றும் மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் இணைந்து விற்பனையை துவக்கினர்.

இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, துணை மேயர் செ.ஜெனிட்டா ஆகியோர் பங்கேற்று வாழ்த்தினர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த சிறப்பு விற்பனையில், பொதுமக்கள் தங்கள் தேவைக்கேற்ப கதர் பொருட்களை சலுகை விலையில் வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.