தூத்துக்குடி நாயுடு மகாஜன சங்கத்தின் செயற்குழு கூட்டம் இன்று (01.11.2025) மாலை சங்க கட்டிடத்தில் வைத்து தலைவர் ராமசாமி நாயுடு அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மேனேஜிங் டிரஸ்டி விவேகானந்தன் நாயுடு மற்றும் செயலாளர் ரெங்கசாமி நாயுடு முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

சங்க உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க, 2026 ஆம் ஆண்டுக்கான தினசரி காலண்டர் 700 பிரதிகள் தயாரித்து, ஆயுள் சந்தா உறுப்பினர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. இதனுடன், சங்கத்தின் வளர்ச்சியும் உறுப்பினர்களுக்கான நலத்திட்டங்களும் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் மோகன் நாயுடு, ஆதி நாத ஆழ்வார் நாயுடு, கே.ஆர். சுப்பிரமணியன் நாயுடு, வெங்கடேசன் நாயுடு, வெங்கட கிருஷ்ண ராஜன் (எ) செல்லச்சாமி நாயுடு, வெங்கட கிருஷ்ணன் நாயுடு, முனியசாமி நாயுடு, எஸ். சங்கரநாராயணன் நாயுடு, சங்கரநாராயணன் நாயுடு, பெருமாள் நாயுடு, அங்கு சாமி நாயுடு, நடராஜன் நாயுடு, செல்வராஜ் நாயுடு, மந்திர மூர்த்தி நாயுடு, முருகன் நாயுடு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு கருத்துரைத்தனர்.

சங்கத்தின் முன்னேற்றத்திற்கான வழிமுறைகள் குறித்து உற்சாகமாக கலந்துரையாடப்பட்ட இக்கூட்டம், நாயுடு மகாஜன சங்கத்தின் ஒற்றுமை மற்றும் சமூக சேவை உறுதியை வெளிப்படுத்தியது.