ஓட்டப்பிடாரம் தொகுதி மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நோய் பரப்பும் கொசுக்களின் பெருக்கம் அதிகரித்து பொதுமக்கள் அச்சத்தில் இருந்தனர். இதுகுறித்து மக்கள் அளித்த புகாரை ஏற்று, உடனடியாக நடவடிக்கை எடுக்க ஓட்டப்பிடாரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா உத்தரவிட்டார்.

அவரது உத்தரவைத் தொடர்ந்து, பூப்பாண்டியபுரம், மாதாநகர், ஆ.சண்முகபுரம், பாலதண்டாயுதநகர், சுடலையாபுரம், S.காமராஜ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் கொசு ஒழிப்பு புகை அடிக்கும் பணி துரிதமாக மேற்கொள்ளப்பட்டது.

மேலும் மீதமுள்ள பகுதிகளிலும் இந்தப் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. மக்கள் நலனில் அக்கறை கொண்டு, எந்தச் சூழலிலும் தாமதமின்றி நடவடிக்கை எடுக்கும் எம்.சி. சண்முகையா எம்எல்ஏ மக்கள் பணி, பொதுமக்களின் பாராட்டை பெற்றுள்ளது.

பொதுமக்கள் சார்பில் “மக்கள் நலனுக்காக எப்போதும் முன்வரும் எம்.எல்.ஏ. சண்முகையா அவர்களுக்கு நன்றி!” என்ற மனப்பூர்வமான நன்றியும் தெரிவிக்கப்பட்டது.