தூத்துக்குடி பீச் ரோட்டில் கடல் பகுதியில், தனியார் பங்களிப்புடன் மிதக்கும் ஹோட்டல் அமைக்கப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு மண்டல அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமினை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "தூத்துக்குடி பீச் ரோடு health zone ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே கேட் முதல் பெல் ஓட்டல் வரை சாலையின் இருபுறங்களிலும் நடைபயிற்சி செல்லும் வகையில் நடைமேடை அமைக்கப்பட உள்ளது. தனியார் பங்களிப்புடன் பீச் ரோட்டில் கடல் பகுதியில் மிதக்கும் ஹோட்டல் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
முகாமில் உடனடியாக தீர்வுகள் காணப்பட்டவர்களுக்கு அதற்கான ஆணைகளை மேயர் வழங்கினார். இதில், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா, பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், மண்டல தலைவர் கலைசெல்வி, மாமன்ற உறுப்பினர்கள் ரெக்ஸ்லின், பேபி ஏஞ்சலின், மகேஸ்வரி, தனலட்சுமி, மும்தாஜ், ராமு அம்மாள், மாநகர மீனவர் அணி அமைப்பாளர் டேனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி கடல் பகுதியில் மிதக்கும் ஹோட்டல் : மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மாற்றுத்திறனாளிகளுக்கான மசோதா தாக்கல் - முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் நன்றி!!
அடுத்த
கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் தோழமை கட்சிகள் கலந்து கொண்ட வஃக்பு திருத்த மசோதாவை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026