ராஜீவ் நகர், P&T காலனி பகுதிகளில் வெள்ளநீர் வெளியேற்ற பணிகள் தீவிரம்
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால், மாநகரின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் அவர்கள் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
மீன்வளக் கல்லூரி அருகே உள்ள மழைநீர் வடிகால் கால்வாயை பார்வையிட்ட அமைச்சர், நீர்ப் பிரவாகம் தடைபடுகின்ற பகுதிகளைப் பற்றி அலுவலர்களிடம் விரிவான தகவல்களை கேட்டறிந்தார். அதே சமயம், தூத்துக்குடி மாநகராட்சி 16ஆம் வார்டில் உள்ள ராஜீவ் நகர் 6வது தெரு மற்றும் P&T காலனி 16வது தெரு பகுதிகளிலும் குடியிருப்புகள் வெள்ளநீரால் பாதிக்கப்பட்டுள்ளதை நேரில் ஆய்வு செய்தார்.
உடனடி நடவடிக்கையாக, வ.உ.சி. துறைமுக ஆணையத்திலிருந்து தீயணைப்பு வாகனத்தை அழைத்து வரவழைத்து, தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. மழை தொடரும் சூழலில் எந்தவித அவசர நிலையும் ஏற்படாதபடி அதிகாரிகள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
குடிமக்களின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் தொடரும் கனமழை – மீன்வளக் கல்லூரி அருகே வடிகால் கால்வாயை ஆய்வு செய்த அமைச்சர் கீதா ஜீவன்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் கோயில் – ஸ்ரீ ஐயப்பன் கோவில் பாதையில் இருள் சூழ்வு: விளக்குகள் பழுது சரி செய்ய வேண்டுமென இந்து முன்னணி கோரிக்கை!!
அடுத்த
தூத்துக்குடி ஹௌசிங் போர்டு பகுதியில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற நடவடிக்கைகள் தீவிரம் – ஒட்டப்பிடாரம் MLA சண்முகையா நேரில் பார்வை!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026