தூத்துக்குடி மாவட்டம் அய்யனடைப்பு கிராமத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் மரம் நடும் பசுமை விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட வன அலுவலர் இளையராஜா தலைமை வகித்தார். திட்ட இயக்குநர் ஐஸ்வர்யா, வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், கோட்டாட்சியர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அய்யனடைப்பு கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மொத்தம் 56 மரக்கன்றுகள் நடப்பட்டன. பசுமை வளர்ச்சியின் அவசியம் குறித்து விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
விழாவில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, கிராம உதயம் கிளை அலுவலகம் ஆழ்வார்தோப்பு தொண்டு நிறுவன மேலாளர் வேல்முருகன், வனச்சரகர் பாபு, வன அலுவலர் ஜெயக்குமார், அய்யனடைப்பு கிராம உதவியாளர் சீனிவாசன், பசுமை தோழர் சந்தன சங்கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.
இந்த பசுமை விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட வனத்துறை, கோத்தாரி இன்டஸ்ட்ரியல், எக்னோரா நிறுவனம் மற்றும் கிராம உதயம் தொண்டு நிறுவனங்கள் இணைந்து செய்திருந்தன.
தூத்துக்குடி
அய்யனடைப்பில் பசுமை விழா: 56 மரக்கன்றுகள் நடவு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மாநகராட்சி வாகன காப்பகத்தில் இருசக்கர வாகனம் திருட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் வாகன உரிமையாளர்கள் அச்சம்!!
அடுத்த
முதலமைச்சரின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சி மனுக்கள் மீது தீர்வு – பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்கிய மேயர் ஜெகன் பெரியசாமி!!
இதையும் படிக்கலாம்
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு CITU போராட்டம்!!
10 Jul 2026
மாணவர்களின் தலைமைத்துவ பயணத்திற்கு புதிய தொடக்கம் – ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் மாணவர் பேரவை துவக்க விழா கோலாகலம்!!
10 Jul 2026
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026