தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட மண்டல அலுவலகங்களில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, தீர்வு பெற்ற பயனாளிகளுக்கு உரிய ஆணைகளை வழங்கினார். பொதுமக்களின் குறைகள் மற்றும் அடிப்படை தேவைகளுக்கு விரைவாக தீர்வு வழங்குவது அரசின் முக்கிய நோக்கம் என அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப, பகுதி கழக செயலாளர் ரவீந்திரன், பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான தொ. நிர்மல்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மனு அளித்த பொதுமக்கள், தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைத்ததற்கு மாநகராட்சி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தனர்.