“தினமலர்” பத்திரிகையை நிறுவி அன்றாட நாட்டு நடப்புகளை மக்களிடம் கொண்டு சென்ற செய்தித் தந்தை டி.வி. ராமசுப்பையர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி பெருமாள் கோவில் தெருவில் உள்ள தினமலர் அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கழக வர்த்தகஅணி செயலாளர், முன்னாள் அமைச்சர் உயர்திரு சி.த. செல்லப்பாண்டியன் அவர்கள் முன்னிலை வகித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணை செயலாளர் சந்தனம், தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங், மாவட்ட மீனவணி துணை தலைவர் டெலஸ்பர், முன்னாள் நகர் மன்ற தலைவர் மனோஜ் குமார், முன்னாள் மீனவரணி செயலாளர் மற்றும் மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் அகஸ்டின் (Ex.MC), முன்னாள் மத்திய கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எட்வின் பாண்டியன் (Ex.MC), மத்திய வடக்கு பகுதி சிறுபான்மை பிரிவு செயலாளர் அசன், முன்னாள் நகர் மன்ற துணை தலைவர் ரத்தினம், ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் உமரி ராஜேஷ் குமார், முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் சிவ சுப்பிரமணியன், வட்ட பிரதிநிதி தாமஸ், முன்னாள் வட்ட பிரதிநிதி அய்யப்பன் ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

மேலும் போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் டெரன்ஸ், ராஜேந்திரன், பேச்சியப்பன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.