தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட விரும்பும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமையகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் விருப்பமனு பெற்றுக் கொள்ளலாம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி கடந்த 15ஆம் தேதி முதல் விருப்பமனுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அதிமுக மாநில வணிக அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன், சென்னை எம்.ஜி.ஆர். மாளிகையில் உள்ள கட்சி நிர்வாகிகளிடம் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பமனுவை தாக்கல் செய்தார்.

மேலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி, எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி, அதற்காகவும் தனியாக ஒரு விருப்பமனுவை தாக்கல் செய்தார்.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவில் தேர்தல் பணிகள் தீவிரமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.