தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட விரும்பும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமையகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் விருப்பமனு பெற்றுக் கொள்ளலாம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி கடந்த 15ஆம் தேதி முதல் விருப்பமனுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், அதிமுக மாநில வணிக அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன், சென்னை எம்.ஜி.ஆர். மாளிகையில் உள்ள கட்சி நிர்வாகிகளிடம் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பமனுவை தாக்கல் செய்தார்.
மேலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி, எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி, அதற்காகவும் தனியாக ஒரு விருப்பமனுவை தாக்கல் செய்தார்.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவில் தேர்தல் பணிகள் தீவிரமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி
தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் விருப்பமனு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி ரயில் பாதை சீரமைப்பு பணிகள்: கோவில்பட்டி–வாஞ்சி மணியாச்சியில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் – அமைச்சர் கீதாஜீவன் அறிவிப்பு!!
அடுத்த
நேஷனல் ஹெரால்டு வழக்கில் பாஜக அரசை கண்டித்து தூத்துக்குடியில் காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்!!
இதையும் படிக்கலாம்
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு CITU போராட்டம்!!
10 Jul 2026
மாணவர்களின் தலைமைத்துவ பயணத்திற்கு புதிய தொடக்கம் – ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் மாணவர் பேரவை துவக்க விழா கோலாகலம்!!
10 Jul 2026
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026