பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 89-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை போயஸ் தோட்டத்தில் அமைந்துள்ள அவருடைய உருவப்படத்திற்கு கழக வர்த்தகஅணி செயலாளர், முன்னாள் அமைச்சர் உயர்திரு சி. த. செல்லப்பாண்டியன் அவர்கள் இன்று மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் கழக வர்த்தகஅணி துணைச் செயலாளர் தென் சென்னை ஜி. சங்கர் மாலை அணிவித்து அன்னாரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

பத்திரிகைத் துறையிலும் சமூக நலத்துறையிலும் தனித்துவமான பங்களிப்புகளைச் செய்த பா. சிவந்தி ஆதித்தனாரின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்வில் கழகத்தினர் பலரும் கலந்து கொண்டு அன்னாரின் நினைவுகளை போற்றினர்.