பீகார் மாநிலத்தில் உள்ள 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நவம்பர் 6 மற்றும் 11 ஆம் தேதிகளில் நடைபெற்று, அதன் வாக்கு எண்ணிக்கை இன்று (நவம்பர் 14) நடைபெற்றது. இதில் NDA கூட்டணி 200 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்று வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது.

இந்த மகத்தான வெற்றியை கொண்டாடும் விதமாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் பழைய பேருந்து நிலையம் அருகில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

இந்த விழாவில் மாநில செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ், முன்னாள் மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், அலுவலக செயலாளர் இசக்கிமுத்து, ராஜோஷ், மேற்கு மண்டல தலைவர் லிங்கசெல்வம், மண்டல பொதுச் செயலாளர் முருகேசன், லட்சுமணன், வடக்கு மண்டல தலைவர் சுதா, கிழக்கு மண்டல பொதுச் செயலாளர் சண்முகசுந்தரம், ஏரல் மண்டல பிரபாரி காளி ராஜா, விருந்தோம்பல் பிரிவு முன்னாள் மாநில செயலாளர் பாலமுருகன், ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் ஜெயக்குமார், மருத்துவப் பிரிவு மாவட்ட தலைவர் பாலாஜி, மகளிர் அணி மாவட்ட தலைவர் வெல்லத்தாய், ஆன்மீகப் பிரிவு மாவட்டத் தலைவர் ஓம் பிரபு, தொழில் பிரிவு மாவட்ட தலைவர் சங்கர், OBC மாவட்ட பொதுச் செயலாளர் வன்னியராஜ், மாவட்ட செயலாளர் குரு, சி.எம். மாரியப்பன், சொக்கலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.