திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் மறைந்த முன்னாள் திமுக மகளிர் அணிச் செயலாளர் ராஜம் ஜான் அவர்களின் உடலுக்கு, திமுக துணைப் பொதுச் செயலாளர் மற்றும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

ராஜம் ஜான் அவர்களின் குடும்பத்தினரிடம் ஆறுதல் வழங்கிய கனிமொழி கருணாநிதி, மகளிர் முன்னேற்றத்திற்காக அவர் செய்த பணிகள் கட்சிக்கும், சமூகத்திற்கும் நினைவில் நிலைத்திருக்கும் என குறிப்பிட்டார்.

அஞ்சலி செலுத்திய நிகழ்வில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், திருநெல்வேலி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் இரா. ஆவுடையப்பன், திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கிரகாம்பெல் உள்ளிட்ட பல திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.