பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனர் தலைவராக செயல்பட்டு வரும் கே.என். இசக்கிராஜா தேவா், தமிழகம் முழுவதும் சமூகநலப் பணிகளில் ஈடுபட்டு வருபவர். தூத்துக்குடியில் இயக்கத்தின் தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது.

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் கௌதமபுரியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மதன் என்பவர், கே.என். இசக்கிராஜா தேவா் குறித்து சமூக வலைதளங்களில் இழிவான மற்றும் தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தி பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து, அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்க பொறுப்பாளர்கள் மற்றும் தேவா் சமூக அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள், சம்பந்தப்பட்ட மதன் மீது உடனடி சட்ட நடவடிக்கை எடுத்து கைது செய்யுமாறு அம்பாசமுத்திரம் காவல் நிலைய துணை கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

புகார் மனுவைப் பெற்ற காவல் துறை அதிகாரிகள், சமூக வலைத்தளங்களில் அவதூறு மற்றும் இழிவுரை பரப்பியவருக்கு எதிராக தக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர்.

இச்சம்பவம் அம்பாசமுத்திரம் மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.