பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனர் தலைவராக செயல்பட்டு வரும் கே.என். இசக்கிராஜா தேவா், தமிழகம் முழுவதும் சமூகநலப் பணிகளில் ஈடுபட்டு வருபவர். தூத்துக்குடியில் இயக்கத்தின் தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது.
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் கௌதமபுரியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மதன் என்பவர், கே.என். இசக்கிராஜா தேவா் குறித்து சமூக வலைதளங்களில் இழிவான மற்றும் தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தி பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து, அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்க பொறுப்பாளர்கள் மற்றும் தேவா் சமூக அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள், சம்பந்தப்பட்ட மதன் மீது உடனடி சட்ட நடவடிக்கை எடுத்து கைது செய்யுமாறு அம்பாசமுத்திரம் காவல் நிலைய துணை கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
புகார் மனுவைப் பெற்ற காவல் துறை அதிகாரிகள், சமூக வலைத்தளங்களில் அவதூறு மற்றும் இழிவுரை பரப்பியவருக்கு எதிராக தக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர்.
இச்சம்பவம் அம்பாசமுத்திரம் மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி
சமூக வலைதளங்களில் இழிவுரை – பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தலைவர் மீது அவதூறு பரப்பியவருக்கு நடவடிக்கை கோரி புகார்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மேட்டுப்பட்டி பகுதியில் வெள்ள நீர் தண்ணீர் வெளியேற்றம்: கீதாஜீவன் நேரடிக் கண்காணிப்பு!
அடுத்த
திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு விறுவிறுப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் – டிஐஜி சந்தோஷ் ஹடிமணி நேரில் ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026