தூத்துக்குடி ரோச் சிறுவர் பூங்காவில் உள்ள மின் கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள பியூஸ் கேரியர் மிகுந்த ஆபத்தான நிலையில் இருப்பது பொதுமக்களின் கவலைக்குரியதாக உள்ளது. சிறுவர்கள் விளையாடும் இடத்திலேயே அந்த மின் அமைப்பு கைபடும் தூரத்தில் இருப்பது பெரும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடியதாகும்.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஏ.ஐ.சி.சி.டி.யு – சி.பி.ஐ (எம்.எல்) கட்சியின் மாவட்ட தலைவர் மின்னல் அம்ஜத் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது “சிறுவர் பூங்கா என்பது குழந்தைகள் மகிழ்ச்சியாக விளையாடும் இடம். ஆனால் அங்கு மின்சாரம் தொடர்பான பொருட்கள் பாதுகாப்பின்றி இருப்பது மிகப்பெரிய அலட்சியம். மின்வாரியமும் தூத்துக்குடி மாநகராட்சியும் உடனடியாக இதை கவனத்தில் கொண்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மக்கள் மீதான அக்கறையுடன் பேராபத்துகள் ஏற்படாத வகையில் முன்கூட்டியே சரிசெய்ய வேண்டும்,” எனத் தெரிவித்தார்.
மின்சார துறையினரும் மாநகராட்சி நிர்வாகமும் விரைந்து செயல்பட்டால், எதிர்பாராத விபத்துகள் தவிர்க்கப்படலாம் என்று பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
தொடர்புக்கு:
மின்னல் அம்ஜத்,
மாவட்ட தலைவர், ஏ.ஐ.சி.சி.டி.யு – சி.பி.ஐ (எம்.எல்),
தூத்துக்குடி மாவட்டம்.
செல்: 95009 10559.
தூத்துக்குடி
மின் கம்பத்தில் ஆபத்தான பியூஸ் கேரியர் – குழந்தைகள் பாதுகாப்புக்கு ஆபத்து!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஏரல் கணேசபுரம் பகுதியில் சாதி சான்றிதழ் சிக்கலால் இளைஞர்கள் கல்வி இழப்பில் – அதிகாரிகளிடம் மனு கொடுக்க முடிவு!!
அடுத்த
“குறைகளை என்னிடம் சொல்லுங்கள் – நிறைவான பணிகளை மற்றவரிடம் கூறுங்கள்!” : தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் உரை!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026