தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்ட முகாமில் காப்பீட்டு அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இதில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு 750 பொதுமக்களுக்கு திட்ட பயனாளர் அட்டைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் கீதாஜீவன் கூறியதாவது “திமுக ஆட்சியில் எல்லோரும் எல்லா நன்மைகளும் பெற வேண்டும் என்ற அடிப்படை கொள்கையுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் மக்களுக்காக உழைத்து வருகிறார். உலக அளவிலேயே ‘திராவிட மாடல் ஆட்சி’ இன்று முன்மாதிரியாக பார்க்கப்படுகிறது.
மக்கள் அனைவரும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் பயன் பெற வேண்டும் என்பதில் அரசு மிகுந்த அக்கறை காட்டுகிறது. ஏற்கனவே அட்டைகள் பெற்றவர்கள் புதுப்பித்துக் கொள்ளவும், புதியவர்கள் விண்ணப்பித்து அடையாள அட்டை பெறவும் முகாம்கள் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தை அனைவரும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மக்களின் குறைகளை என்னிடம் நேரடியாக சொல்லுங்கள் — ஆனால் நிறைவான பணிகளை மற்றவரிடம் கூறுங்கள்! எந்த நேரத்திலும் உங்களுக்காக உதவ தயாராக வடக்கு மாவட்ட திமுக இருக்கிறது. மக்களுக்கு தேவையான சேவைகள் தொடர்ச்சியாக நடைபெறும்.” என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், இளைஞரணி துணை அமைப்பாளர் ரவி, சுற்றுச்சூழல் அணி தலைவர் வினோத், வட்டப்பிரதிநிதி பாஸ்கர், மணி, அல்பட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
“குறைகளை என்னிடம் சொல்லுங்கள் – நிறைவான பணிகளை மற்றவரிடம் கூறுங்கள்!” : தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் உரை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மின் கம்பத்தில் ஆபத்தான பியூஸ் கேரியர் – குழந்தைகள் பாதுகாப்புக்கு ஆபத்து!
அடுத்த
மக்கள் குரலை மௌனப்படுத்த முயற்சி — நெல்லையில் டாக்டர் வி. சுரேஷ் மீது தாக்குதல்!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026