தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கில் தேசிய தன்னார்வ இரத்ததான தினம் சிறப்பாக நடைபெற்றது. ஆண்டுதோறும் அரசு மருத்துவமணைகளில் இரத்ததான முகாம்களை நடத்தி, அதிக இரத்ததானம் செய்த சமூக அமைப்புகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பாராட்டு சான்றிதழ்கள் வழங்குவது வழக்கமாகும்.

அதன்படி, கடந்த 2024ஆம் ஆண்டு அதிகமான இரத்ததான முகாம்களை ஒருங்கிணைத்து, நூற்றுக்கணக்கான உயிர்களுக்கு நம்பிக்கை அளித்த “மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை” குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியது. இதனை மதித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உயர்திரு இளம்பகவத், I.A.S. அவர்கள் அறக்கட்டளைக்கு பாராட்டு சான்றிதழை வழங்கினார். அறக்கட்டளை சார்பில் திரு. ஸ்டாலின் அவர்கள் சான்றிதழை பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் தூத்துக்குடி அரசு மருத்துவமணை மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் சிவக்குமார் அவர்கள் உடனிருந்தார்.

இரத்தம் தானம் செய்து உயிர்களை காப்பாற்றும் பணியில் தொடர்ச்சியாக அர்ப்பணிப்பு காட்டி வரும் மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை சமூக நலனில் முன்னிலை வகிப்பதை மாவட்ட நிர்வாகம் பாராட்டியது.