தூத்துக்குடி நகரத்தில் கொசு தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து, பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
வேலை முடித்து வீட்டிற்கு வந்து, பிள்ளைகளோடு சிறிது நேரம் மகிழ்ச்சியாக கழித்து, நிம்மதியாக தூங்க நினைக்கும் பெற்றோர்கள் கூட கொசு தொல்லையால் இரவெல்லாம் விழித்திருக்க நேரிடுகிறது.
“இந்த கொசு தொல்லையால் எங்கள் தூக்கம் போய்விட்டது. இரவு முழுவதும் தூங்க முடியாமல் தவிக்கிறோம். மறுநாள் வேலைக்கு செல்ல உடல் சக்தியே இல்லாமல் போகிறது,” என பலர் வலியுறுத்துகின்றனர்.
பிரையன்ட் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் கொசு தொல்லை அதிகரித்துள்ள நிலையில், மாநகராட்சி உடனடியாக கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
“மாநகராட்சி அதிகாரிகள் கொசு மருந்து தெளிப்பு பணிகளை அடிக்கடி மேற்கொண்டு, இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்” என பொதமக்கள் வலியுறுத்துகின்றனர்.
தூத்துக்குடி மாநகராட்சியிடம் தற்போது அனைவரும் எதிர்பார்ப்பது — “ஒரு நிம்மதியான தூக்கம்!”
தூத்துக்குடி
“தூக்கம் போச்சு… கொசு தாண்டவம் தொடர் பிரச்சினை!” — தூத்துக்குடி மக்களின் ஏக்கம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் “மகிழ்வித்து மகிழ்” அறக்கட்டளைக்கு ஆட்சியரின் பாராட்டு!
அடுத்த
தூத்துக்குடி மாநகரில் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை கொசு மருந்து தெளிக்க மேயர் ஜெகன் பெரியசாமி உத்தரவு!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026