தூத்துக்குடி நகரத்தில் கொசு தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து, பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

வேலை முடித்து வீட்டிற்கு வந்து, பிள்ளைகளோடு சிறிது நேரம் மகிழ்ச்சியாக கழித்து, நிம்மதியாக தூங்க நினைக்கும் பெற்றோர்கள் கூட கொசு தொல்லையால் இரவெல்லாம் விழித்திருக்க நேரிடுகிறது.

“இந்த கொசு தொல்லையால் எங்கள் தூக்கம் போய்விட்டது. இரவு முழுவதும் தூங்க முடியாமல் தவிக்கிறோம். மறுநாள் வேலைக்கு செல்ல உடல் சக்தியே இல்லாமல் போகிறது,” என பலர் வலியுறுத்துகின்றனர்.

பிரையன்ட் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் கொசு தொல்லை அதிகரித்துள்ள நிலையில், மாநகராட்சி உடனடியாக கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

“மாநகராட்சி அதிகாரிகள் கொசு மருந்து தெளிப்பு பணிகளை அடிக்கடி மேற்கொண்டு, இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்” என பொதமக்கள் வலியுறுத்துகின்றனர்.

தூத்துக்குடி மாநகராட்சியிடம் தற்போது அனைவரும் எதிர்பார்ப்பது — “ஒரு நிம்மதியான தூக்கம்!”