தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிநாதர் பெருமாள் திருக்கோவிலுக்குச் சொந்தமான புல எண் 974/2–ல் உள்ள சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள 4 சென்ட் நிலம், ஆழ்வார் திருநகரி திமுக பிரமுகர் மற்றும் அவரது உறவினரான ஜெகதீஷ் ஆகியோர் மூலம் அத்துமீறி கட்டிடங்கள் எழுப்பி ஆக்கிரமிக்கப்பட முயற்சிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சட்டவிரோத நடவடிக்கை குறித்து கோவில் செயல் அலுவலர் காவல்துறையில் புகார் அளித்தும், இதுவரை வழக்குப் பதிவு அல்லது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்பதால், கோவில் சொத்துகளை பாதுகாக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, தூத்துக்குடி பாரதிய ஜனதா கட்சி மாவட்டத் தலைவர் சித்ராங்கதன் மற்றும் பாஜக வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் தலைவர் சீனிவாசன் ஆகியோர் சேர்ந்து ஸ்ரீவைகுண்டம் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சென்று புகார் மனு அளித்தனர்.
இந்த நிகழ்வில் மாவட்ட பொதுச் செயலாளர் செல்வராஜ், மாவட்ட துணைத் தலைவர் முத்துராமலிங்கம், முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் D.ராஜா, ஸ்ரீவைகுண்டம் மண்டல தலைவர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின் அவர்கள் தெரிவித்ததில், “கோவில் சொத்துகளை பாதுகாப்பதில் பாஜக எப்போதும் முன்னிலையாக இருக்கும். கோவில் நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சிக்கும் யாரையும் சட்டம் விடமாட்டாது. உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்” என்று தெரிவித்தனர்.
தூத்துக்குடி
ஆதிநாதர் பெருமாள் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு முயற்சி – உடனடி நடவடிக்கை கோரி தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக புகார் மனு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விளாத்திகுளத்தில் ரூ.7 லட்சம் செலவில் கட்டிய புதிய நிழற்குடை கட்டிடத்தை எம்எல்ஏ மார்கண்டேயன் திறந்து வைத்தார்!!
அடுத்த
“பிளாஸ்டிக்குக்கு ‘விடை’ – துணிப்பைக்கு ‘வணக்கம்’ கூறிய தூத்துக்குடி மாணவர்கள்!”
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026