ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், தருவைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் மூலம் 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 4 கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிகளுக்கு ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் காயத்ரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காந்திமதி, ஊராட்சி செயலர் செந்தில், பள்ளி தலைமை ஆசிரியர் ஆண்டோ ரூபன், கிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்து, தருவைக்குளம் பங்குத்தந்தை வின்சென்ட், தருவைக்குளம் கிளை செயலாளர் ராபின் ஞானப்பிரகாசம், தயாளன், பிரசன்னா, மகளிரணி அன்னசெல்வம், ஏ.எம்.பட்டி கிளை செயலாளர் பாலமுருகன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படுவதன் மூலம் பள்ளியில் கல்வி வசதிகள் மேம்பட்டு மாணவ மாணவிகள் சிறந்த சூழலில் கல்வி பயில வாய்ப்பு உருவாகும் என தெரிவிக்கப்பட்டது.