“மரங்களும் மழலைகளும் ஒன்று; சரியாக வளர்த்து ஆளாக்கினால், வரும் தலைமுறை ஆரோக்கியமாக இருக்கும்” என்ற நோக்கத்துடன் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொடர்ந்து செயல்பட்டு வரும் ALL_CAN_TRUST அமைப்பின் சார்பில், இன்று (26.10.2025) தூத்துக்குடி திரேஸ்புரம் காந்தி இர்வின் உப்பு சங்கம், பெந்தேகோஸ்தே சபை அருகில் உள்ள பகுதியில் 389வது வார மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பசுமை வளர்ச்சி நோக்கில் சமூகப் பொறுப்புடன் செயல்படும் இளைஞர்கள், பொதுமக்கள் இணைந்து பல்வேறு வகை மரக்கன்றுகளை நடவு செய்தனர். “மரம் வளர்ப்போம், இயற்கையை பாதுகாப்போம்” என்ற வாசகத்துடன் நடைபெற்ற இந்த நிகழ்வில், சுற்றுப்புறத்தை பசுமையாக மாற்றி இயற்கை சமநிலையை பேணும் நோக்கில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மக்கள் தங்கள் வீடுகள், பள்ளிகள், பொது இடங்கள் ஆகியவற்றில் குறைந்தது ஒரு மரம் நடும் பழக்கத்தை உருவாக்க வேண்டும் என ALL_CAN_TRUST குழுவினர் வலியுறுத்தினர்.
மழையும் மண்ணும் இணைந்த பசுமையான சூழல் உருவாக வேண்டுமெனும் எண்ணத்துடன், இந்நிகழ்ச்சி தூத்துக்குடி நகரில் பசுமை பாதையை உருவாக்கும் சிறந்த முயற்சியாக திகழ்கிறது.
தூத்துக்குடி
பசுமை பணியில் புதிய அத்தியாயம் — 389வது வார மரக்கன்று நடும் நிகழ்ச்சி தூத்துக்குடியில்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அய்யனடைப்பில் ரூ.1015.20 லட்சம் மதிப்பில் பல்நோக்கு பாதுகாப்பு மைய கட்டிடம் – கனிமொழி கருணாநிதி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்!!
அடுத்த
கந்தசஷ்டி களைகட்டும் திருச்செந்தூர் — நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026