“மரங்களும் மழலைகளும் ஒன்று; சரியாக வளர்த்து ஆளாக்கினால், வரும் தலைமுறை ஆரோக்கியமாக இருக்கும்” என்ற நோக்கத்துடன் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொடர்ந்து செயல்பட்டு வரும் ALL_CAN_TRUST அமைப்பின் சார்பில், இன்று (26.10.2025) தூத்துக்குடி திரேஸ்புரம் காந்தி இர்வின் உப்பு சங்கம், பெந்தேகோஸ்தே சபை அருகில் உள்ள பகுதியில் 389வது வார மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பசுமை வளர்ச்சி நோக்கில் சமூகப் பொறுப்புடன் செயல்படும் இளைஞர்கள், பொதுமக்கள் இணைந்து பல்வேறு வகை மரக்கன்றுகளை நடவு செய்தனர். “மரம் வளர்ப்போம், இயற்கையை பாதுகாப்போம்” என்ற வாசகத்துடன் நடைபெற்ற இந்த நிகழ்வில், சுற்றுப்புறத்தை பசுமையாக மாற்றி இயற்கை சமநிலையை பேணும் நோக்கில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மக்கள் தங்கள் வீடுகள், பள்ளிகள், பொது இடங்கள் ஆகியவற்றில் குறைந்தது ஒரு மரம் நடும் பழக்கத்தை உருவாக்க வேண்டும் என ALL_CAN_TRUST குழுவினர் வலியுறுத்தினர்.

மழையும் மண்ணும் இணைந்த பசுமையான சூழல் உருவாக வேண்டுமெனும் எண்ணத்துடன், இந்நிகழ்ச்சி தூத்துக்குடி நகரில் பசுமை பாதையை உருவாக்கும் சிறந்த முயற்சியாக திகழ்கிறது.