ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் இளவேலங்கால் ஊராட்சி அயிரவன்பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டிடம் கட்டும் பணிகளுக்கு ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ், உதவி பொறியாளர் செந்தில், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருண்குமார், இளைஞரணி சரவணகுமார், கணேசமூர்த்தி, கிளை செயலாளர் முருகன், அரசு ஒப்பந்ததாரர்கள் முஹம்மது, ஜோசப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், ஊர் பொதுமக்கள் திரளாக பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.