விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் சிவஞானபுரம் ஊராட்சி A.லட்சுமிபுரம் கிராமத்தில் புதிய பகுதிநேர நியாய விலைக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. இதில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V. மார்கண்டேயன் கலந்து கொண்டு கடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நியாய விலை பொருட்களை வழங்கினார்.

நிகழ்வில் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் புதுராஜன், ஆதிசங்கர், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன், விளாத்திகுளம் பேரூர் கழகத் தேர்தல் பார்வையாளர் ராமச்சந்திரன், தேர்தல் பார்வையாளர் சங்கர்ராம், சிவஞானபுரம் கூட்டுறவு சங்க செயலாளர் பரமசிவம், கிளைச் செயலாளர்கள் சரவணன், மாரியப்பன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ராஜா, பாக முகவர் கார்த்திக் ராஜா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

A.லட்சுமிபுரம் மற்றும் சுற்றுவட்டார மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை எளிதில் பெற உதவும் வகையில் இந்த நியாய விலை கடை அமைக்கப்பட்டுள்ளதை மக்கள் வரவேற்றனர்.