தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் கல்லூரியில் 25 ஏக்கர் பரப்பளவில் தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தமிழ்நாடு வனத்துறை, வனச்சரகம் சார்பில் 5025 மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடங்கப்பட்டன. இந்தப் பணிகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் G.V.மார்கண்டேயன் மற்றும் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இந்த நிகழ்வில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, வனச்சரக அலுவலர் பாபு, நாட்டு நல பணித்திட்டம் ஒருங்கிணைப்பாளர் வெளியப்பன், கல்லூரி முதல்வர் முருகானந்தம், ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவஹர், மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் செல்வி, பேராசிரியர்கள் சேதுராமன், பவானி, ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் முத்துராஜ், வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி சத்தியராஜன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிதம்பரம், கிளைச் செயலாளர்கள் ஸ்ரீனிவாசகம், ரகு, பெருமாள், இளைஞரணி முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், தூத்துக்குடி மாவட்டம் பருவக்குடி–வேம்பார்–சித்தவநாயக்கன்பட்டி செல்லும் சாலையில் மரக்கன்றுகள் நடும் பணிகளையும் G.V.மார்கண்டேயன் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், கிளை செயலாளர்கள் விஜயகுமார், வேதமணி, ஊராட்சி செயலர் பானு உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.