இந்திய சுதந்திரத்திற்கு முதல் முழக்கமிட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வமாக விளங்கும் அருள்மிகு வீரசக்கதேவி ஆலயத்தின் 15-வது ஆண்டு வருஷாபிஷேக விழா வரும் 1201ம் ஆண்டு விஸ்வாவசு வருஷம், தை மாதம் 24-ஆம் தேதி (07.02.2026) சனிக்கிழமை, சித்திரை நட்சத்திரமும் அமிர்த யோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் சிறப்பாக நடைபெற உள்ளது. அன்று காலை 8.30 மணிக்கு மேல் 12.00 மணிக்குள், கும்ப லக்னத்தில் தேவியின் திருவருள் துணையுடன் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட வண்ணம் வருஷாபிஷேக பூஜைகள் நடைபெற உள்ளன.

நிகழ்ச்சி நிரல் காலை 8.30 மணிக்கு மேல் விக்னேஸ்வர பூஜை, விநாயகர் அனுக்ஞை, எஜமானர் அனுக்ஞை, புண்யாஹவாசனம், மகா கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், மகாலட்சுமி ஹோமம், துர்கா ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை, மகா அபிஷேகம், விமான அபிஷேகம், வருஷாபிஷேக அலங்கார தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெறுகின்றன.

மேலும், விழாவை முன்னிட்டு அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவில் பக்தகோடி பெருமக்கள் அனைவரும் தங்களது சுற்றத்தாருடன் கலந்து கொண்டு அருள்மிகு வீரசக்கதேவியின் திருவருளையும் அருட்பிரசாதத்தையும் பெற்றுச் செல்லுமாறு ஆலயக் குழு சார்பில் அன்புடன் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இவ்விழா ஏற்பாடுகளை அருள்மிகு வீரசக்கதேவி ஆலயக் குழு பாஞ்சாலங்குறிச்சி சிறப்பாக செய்து வருகிறது. செயலாளர் M. ஆதிசங்கர் 99941 69917, பொருளாளர் P. வரதராஜப் பெருமாள் 98942 94330