தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரிலுள்ள சித்தர் பீடத்தில் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஒவ்வோர் மாதமும் அமாவாசை மற்றும் தேய்பிறை அஷ்டமி நாளில் நடைபெறும் வழிபாட்டின் ஒரு பகுதியாக, இம்மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி மஹா காலபைரவருக்கு மஞ்சள், பால், தயிர், பன்னீர், இளநீர், புனுகு உள்ளிட்ட அபிஷேகங்கள் அர்ச்சகர்களால் நடத்தப்பட்டன.

அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மஹா காலபைரவர் பக்தர்களுக்கு அருள்காட்சியளித்தார். ஸ்ரீசித்தர் பீட சுவாமிகள் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் பக்தர்கள் வாழ்க்கையில் கடன்தொல்லை, எதிரித்தொல்லை நீங்கி செல்வ வளம் பெருக வேண்டி மஹா யாகத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பீர்க்கும் பவனியாக பிரார்த்தனை செய்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் மகா அன்னதானம் வழங்கப்பட்டது.