தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரிலுள்ள சித்தர் பீடத்தில் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஒவ்வோர் மாதமும் அமாவாசை மற்றும் தேய்பிறை அஷ்டமி நாளில் நடைபெறும் வழிபாட்டின் ஒரு பகுதியாக, இம்மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி மஹா காலபைரவருக்கு மஞ்சள், பால், தயிர், பன்னீர், இளநீர், புனுகு உள்ளிட்ட அபிஷேகங்கள் அர்ச்சகர்களால் நடத்தப்பட்டன.
அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மஹா காலபைரவர் பக்தர்களுக்கு அருள்காட்சியளித்தார். ஸ்ரீசித்தர் பீட சுவாமிகள் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் பக்தர்கள் வாழ்க்கையில் கடன்தொல்லை, எதிரித்தொல்லை நீங்கி செல்வ வளம் பெருக வேண்டி மஹா யாகத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பீர்க்கும் பவனியாக பிரார்த்தனை செய்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் மகா அன்னதானம் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி
“மகா காலபைரவருக்கு மஞ்சள் அபிஷேகம் – பக்தர்கள் நலன் வேண்டி சிறப்பு யாகம்!”
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“பொன் ராதாகிருஷ்ணன் கருத்து தரம் தாழ்ந்தது!” — தூத்துக்குடி காங்கிரஸ் தலைவர் முரளிதரன் கடும் கண்டனம்!!
அடுத்த
“புனிதர்களின் நம்பிக்கைச் சாட்சி — தூத்துக்குடி மறைமாவட்டம் முழுவதும் நினைவேந்தல் விழா”
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026