தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையினால், ஓடைகள் மற்றும் வடிகால்கள் முழு கொள்ளளவில் நீரை எடுத்துச் செல்லும் நிலையில் உள்ளன. மழை நீர்த் தேக்கம் மற்றும் நகரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டுப் பரிசீலனை செய்து விளக்கம் வழங்கினார்.

புறநகர் பகுதிகளில் இருந்து இதுவரை எந்தவிதமான மழைநீரும் மாநகர எல்லைக்குள் வராததால், தூத்துக்குடி மாநகரம் பாதுகாப்பான நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சில பகுதிகளில் காணப்படும் மழைநீர் தேக்கம், மழை தீவிரம் குறைந்தவுடன் படிப்படியாக குறையும் என்றும் கூறினார்.

மழை தொடர்பான அவசர நிலை, புகார் மற்றும் உதவி தேவைகளுக்காக தூத்துக்குடி மாநகராட்சி கட்டணமில்லா 1800 203 0401 என்ற எண்ணில் பொதுமக்கள் எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம் எனவும் மேயர் ஜெகன் பெரியசாமி அறிவித்தார்.