சகா கலைக்குழுவின் நிறுவனரும், சமூகப் பணியாளரும், பல்துறை அறிஞருமான முனைவர் மா. சங்கர், தனது கலை வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும் சந்தித்த மனிதர்களின் நினைவுகளைச் சுவடுகளில் பதியச் செய்து, அவற்றை அழியாத பொக்கிஷமாகப் பாதுகாத்து வரும் அரிய பணியை தொடர்ந்து செய்து வருகிறார்.

தன் பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் இருந்து தொடங்கி, கலை துறையில் பயணித்தவர்களான நண்பர்கள், கலைஞர்கள், கலைமாமணி விருது பெற்ற சிற்பிகள், கலை ஆசிரியர்கள், உற்றார் உறவினர்கள், கலை பயிலக்கூடிய இளம் திறமையாளர்கள், ஆசான்கள், மேலும் தன்னுடன் நெருங்கிப் பணியாற்றிய அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகிகள், ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், அதோடு சமூக நலனில் தங்களை அர்ப்பணித்த சமூக போராளிகள், பண்பாளர்கள், மேதாவிகள் என எண்ணற்ற நபர்களை அவர் நேரில் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொருவருடனும் எடுத்துக்கொள்ளப்பட்ட புகைப்படங்களை, சாதாரண புகைப்படங்களாக அல்லாமல், நினைவு சின்னங்களாக கருதி, தனது வாழ்க்கைப் பயணத்தின் அரிய சுவடிகளாக மா. சங்கர் பராமரித்து வருகிறார். ஒரு மனிதன் வாழ்க்கையில் சந்திக்கும் நற்பண்பும் நற்பெருமையும் கொண்ட மனிதர்களின் நினைவுகளே உண்மையான செல்வம் என்ற உண்மை அவருடைய செயல்களிலேயே வெளிப்படுகிறது.

இந்த அரிய முயற்சியின் மூலம், மனிதர்கள் இடையேயான பாசமும், பண்பாட்டுச் செல்வமும், கலைப்பயணத்தின் அழகும் தலைமுறைகள் பேசும் அழியாத பொக்கிஷமாக மாறி வருகின்றன.

முனைவர் மா. சங்கரின் இந்தப் பொக்கிஷப் பயணம், கலைக்கும், மனித நேயத்துக்கும் அவர் காட்டும் உயர்ந்த மரியாதையின் சின்னமாக திகழ்கிறது.