தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி ஆகியோரின் ஆணைப்படி, மீன் வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின் பேரில், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா ஆலோசனையின் படி, கோரம்பள்ளம் ஊராட்சி பூத் எண் 241, 242, 243-ல் SIR சிறப்பு வாக்காளர் திருத்த முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் தூத்துக்குடி மத்திய ஒன்றிய கழகச் செயலாளர் ஜெயக்கொடி (KKR ஜெயக்கொடி) மற்றும் தூத்துக்குடி மத்திய ஒன்றிய பார்வையாளர் வழக்கறிஞர் பூங்குமார் நேரில் சென்று முகாம் செயல்முறைகளை விரிவாக ஆய்வு செய்தனர்.
வாக்காளர் கணக்கீட்டு படிவங்கள் சரியாக நிரப்பப்படுகிறதா, பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டுள்ளனவா என்பதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்து பரிசோதனை மேற்கொண்டனர்.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை முகவர்கள், கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் முகாமில் பங்கேற்று பணிகளை ஒருங்கிணைத்தனர். வாக்காளர் பட்டியல் துல்லியமாக புதுப்பிக்கப்படும் நோக்கில் நடைபெற்ற இந்த ஆய்வு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
தூத்துக்குடி
கே.கே.ஆர். ஜெயக்கொடி நேரில் ஆய்வு – கோரம்பள்ளம் SIR சிறப்பு வாக்காளர் திருத்த முகாம் சிறப்பாக நடைபெற்றது!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
G.V. மார்கண்டேயன் முன்னெடுத்த பெரிய முன்னேற்றம் — 50 ஆண்டு கனவான பாலம் பணி தொடக்கம்; வாக்காளர் சேவைகளும் கண்காணிப்பு!!
அடுத்த
“கலையின் கதைகள் – மனிதர்களின் நினைவுகளை பொக்கிஷமாகப் பாதுகாக்கும் முனைவர் மா. சங்கர்”
இதையும் படிக்கலாம்
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு CITU போராட்டம்!!
10 Jul 2026