தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி ஆகியோரின் ஆணைப்படி, மீன் வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின் பேரில், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா ஆலோசனையின் படி, கோரம்பள்ளம் ஊராட்சி பூத் எண் 241, 242, 243-ல் SIR சிறப்பு வாக்காளர் திருத்த முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் தூத்துக்குடி மத்திய ஒன்றிய கழகச் செயலாளர் ஜெயக்கொடி (KKR ஜெயக்கொடி) மற்றும் தூத்துக்குடி மத்திய ஒன்றிய பார்வையாளர் வழக்கறிஞர் பூங்குமார் நேரில் சென்று முகாம் செயல்முறைகளை விரிவாக ஆய்வு செய்தனர்.

வாக்காளர் கணக்கீட்டு படிவங்கள் சரியாக நிரப்பப்படுகிறதா, பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டுள்ளனவா என்பதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்து பரிசோதனை மேற்கொண்டனர்.

வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை முகவர்கள், கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் முகாமில் பங்கேற்று பணிகளை ஒருங்கிணைத்தனர். வாக்காளர் பட்டியல் துல்லியமாக புதுப்பிக்கப்படும் நோக்கில் நடைபெற்ற இந்த ஆய்வு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.