மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளையின் 2ஆம் ஆண்டு தினத்தை முன்னிட்டு, டிஎம்பி பவுண்டேஷன் மற்றும் தூத்துக்குடி நகர காவல் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை இணைந்து “போதைக்கு மாற்று விளையாட்டு” என்ற தலைப்பில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி, தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கம் (தருவை மைதானம்) வாயிலில் இருந்து துவங்கி நடைபெற்றது.

மாரத்தான் போட்டியில் பள்ளி மாணவர்கள், பள்ளி மாணவிகள், பொதுப் பிரிவு ஆண்கள், பொதுப் பிரிவு பெண்கள் என நான்கு பிரிவுகளில் நடைபெற்றது. ரூ.5000, ரூ.3000, ரூ.2000 என முதல் மூன்று இடத்தினருக்கும், 4 முதல் 10ஆம் இடம் பெற்றவர்களுக்கு தலா ரூ.500 ரொக்கப் பரிசு மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

பள்ளி மாணவர்கள் பிரிவு:
முதலிடம் – சிதம்பர ராஜா
இரண்டாம் இடம் – அன்பு செல்வன்
மூன்றாம் இடம் – மாரி செல்வம்

பள்ளி மாணவிகள் பிரிவு:
முதலிடம் – மகாலட்சுமி
இரண்டாம் இடம் – அனுபிரியதர்ஷினி
மூன்றாம் இடம் – நிவேதா

பொதுப் பிரிவு ஆண்கள்:
முதலிடம் – கருத்தபாண்டி
இரண்டாம் இடம் – மனோஜ் குமார்
மூன்றாம் இடம் – ரூபன் டேனியல்

பொதுப் பிரிவு பெண்கள்:
முதலிடம் – ரம்யா
இரண்டாம் இடம் – ராதிகா
மூன்றாம் இடம் – திவ்யாமணி

மாரத்தானிற்கு மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளையின் நிறுவனர் இயக்குநர் ஜாய்சன் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் ஐபிஎஸ்,
டிஎம்பி பவுண்டேஷன் நிர்வாக அலுவலர் ஜெய்சங்கர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அலுவலர் அந்தோணி அதிர்ஷ்டராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.

மாரத்தானில் கலந்து கொண்ட வயது குறைந்த மாணவர், அதிக வயதுடைய முதியவர், பார்வை மாற்றுத் திறனாளி, மனநலம் பாதிக்கப்பட்டவர் என நான்கு பேர் சிறப்பாக கௌரவிக்கப்பட்டனர்.
மாரத்தானில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் டீ-ஷர்ட் வழங்கப்பட்டது.

சுமார் 1000க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக கலந்து கொண்ட இந்த விழிப்புணர்வு மாரத்தானை சிறப்பாக ஒருங்கிணைத்தனர் விக்னேஷ், ஹரி பிரசாத், அசோக், சந்தோஷ், பிரசன்னா, கௌதம் உள்ளிட்ட அறக்கட்டளையின் இளைஞர்கள்.

“போதைக்கு மாற்று விளையாட்டு” — ஆரோக்கியமான சமுதாயத்திற்கான வலியுறுத்தலாக விளங்கிய நிகழ்வு!