நாசரேத் – சாத்தான்குளம் சாலையில் இயங்கும் டூவீலர் ஒர்க்ஷாப் ஒன்றை இளைஞர் கார்த்தீசன் திறம்பட நடத்தி வருகிறார். அவர் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கும் தொகை மிக குறைவாக இருந்தாலும், செய்யும் சேவை அளவு மிக உயர்ந்தது என்பதுதான் அவரின் சிறப்பு.
நேற்று பைக்கிற்கு ஆயில் மாற்ற சென்ற வாடிக்கையாளரின் அனுபவம் இதற்கு சான்றாக இருந்தது. பைக்கின் பழைய ஆயிலை எடுப்பதற்காக எஞ்சின் அடிப்பகுதியிலுள்ள நட்டை கழற்றி, அதின் கீழ் பாத்திரம் வைத்தார்.
ஆயில் வழிந்து முடியும் வரை காத்திருக்காமல், அந்த இடைவெளியில் இரண்டு டயர்களுக்கும் ஏர் செக் செய்து விட்டார்.
அதன் பின், செயின்ஸ் பிராக்கெட்டை சரி செய்வதற்காக பின் வீலை கழற்றி, பிராக்கெட்டை டைட் செய்து, செயினுக்கு புதிய ஆயில் பூசி பராமரித்தார்.
பழைய ஆயில் முழுவதுமாக வெளியேறியதும், புதிய ஆயிலை ஊற்றி, வேலை முடிந்ததும் ₹50 ரூபாய் மட்டுமே கூலியாக பெற்றார்.
வெறும் ஆயில் மாற்றத்திற்கே அந்த தொகையை நாம் கொடுப்போம். ஆனால் அந்த ஐம்பது ரூபாய்க்கு அளவிலாத உழைப்பும் உண்மையும் சேர்க்கும் கார்த்தீசன், இன்று பலரின் பாராட்டை பெற்றுள்ளார். பணத்தை விட மனசார சேவையை முக்கியமாகக் காணும் அவரின் பண்பு அனைவருக்கும் ஒரு சிறந்த உதாரணமாகும்.
தூத்துக்குடி
“ஐம்பது ரூபாய்க்கு முழு மனசார சேவை — கார்த்தீசன் மாதிரி மெக்கானிக் தான் வித்தியாசம்!”
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் “போதைக்கு மாற்று விளையாட்டு” — 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற விழிப்புணர்வு மினி மாரத்தான்!
அடுத்த
“வேல் வேல் முருகா! – தூத்துக்குடியில் கந்த சஷ்டி முன்னிட்டு 108 பால்குடம் பவனி உற்சாகம்”
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026