நாசரேத் – சாத்தான்குளம் சாலையில் இயங்கும் டூவீலர் ஒர்க்ஷாப் ஒன்றை இளைஞர் கார்த்தீசன் திறம்பட நடத்தி வருகிறார். அவர் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கும் தொகை மிக குறைவாக இருந்தாலும், செய்யும் சேவை அளவு மிக உயர்ந்தது என்பதுதான் அவரின் சிறப்பு.

நேற்று பைக்கிற்கு ஆயில் மாற்ற சென்ற வாடிக்கையாளரின் அனுபவம் இதற்கு சான்றாக இருந்தது. பைக்கின் பழைய ஆயிலை எடுப்பதற்காக எஞ்சின் அடிப்பகுதியிலுள்ள நட்டை கழற்றி, அதின் கீழ் பாத்திரம் வைத்தார்.
ஆயில் வழிந்து முடியும் வரை காத்திருக்காமல், அந்த இடைவெளியில் இரண்டு டயர்களுக்கும் ஏர் செக் செய்து விட்டார்.

அதன் பின், செயின்ஸ் பிராக்கெட்டை சரி செய்வதற்காக பின் வீலை கழற்றி, பிராக்கெட்டை டைட் செய்து, செயினுக்கு புதிய ஆயில் பூசி பராமரித்தார்.
பழைய ஆயில் முழுவதுமாக வெளியேறியதும், புதிய ஆயிலை ஊற்றி, வேலை முடிந்ததும் ₹50 ரூபாய் மட்டுமே கூலியாக பெற்றார்.

வெறும் ஆயில் மாற்றத்திற்கே அந்த தொகையை நாம் கொடுப்போம். ஆனால் அந்த ஐம்பது ரூபாய்க்கு அளவிலாத உழைப்பும் உண்மையும் சேர்க்கும் கார்த்தீசன், இன்று பலரின் பாராட்டை பெற்றுள்ளார். பணத்தை விட மனசார சேவையை முக்கியமாகக் காணும் அவரின் பண்பு அனைவருக்கும் ஒரு சிறந்த உதாரணமாகும்.