தூத்துக்குடி நகர மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கி நகர வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய முன்னாள் நகர மன்ற தலைவர், நன்னீர் வழங்கிய நாயகன் என போற்றப்படும் ஐயா ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்து அவர்களின் 156வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகத்தின் சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

தூத்துக்குடியில் அமைந்துள்ள அவரது முழு உருவச் சிலைக்கு மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில், நாடார் பேரவை மாவட்ட தலைவர் அருண் சுரேஷ் குமார் முன்னிலையில், மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட் அவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல், மாவட்ட பொருளாளர் லயன் பழனிவேல், பொதுக்குழு உறுப்பினர் உதயசூரியன், மாவட்ட துணைச் செயலாளர் அருள்ராஜ், மாவட்ட தொண்டரணி செயலாளர் முத்துசெல்வம், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சங்கர், மாவட்ட மகளிர் அணி செயலாளர் குருவம்மாள், மாநகர தொண்டரணி செயலாளர் காமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.