தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மைதானத்தில் எம்.பி. கனிமொழி முன்னெடுப்பில் நெய்தல் கலை திருவிழா நேற்று தொடங்கியது.

இரண்டாம் நாளான ஜூன் 14 ம் தேதியான இன்று சனிக்கிழமை மாலை 5.45 மணிமுதல் 6.15 மணிவரை தூத்துக்குடி தமிழன்டா கலைக்குழு நிகழ்ச்சியும், 6.15 மணிமுதல் 6.45 மணிவரை அபிநயகீதம் பல்சுவை கலை நிகழ்ச்சியும், 6.45 மணிமுதல் 7.15 மணிவரை குமார ராமன் தேவராட்டம் கலைக்குழு நிகழ்ச்சியும், 7.15 மணிமுதல் 7.45 மணிவரை கொங்கு பண்பாட்டு மையம் நிகழ்ச்சியும், நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து 7.45 மணிமுதல் 8.15 மணிவரை மாலன் மாற்றுத்திறனாளிகள் மல்லர் கம்பம் குழு நிகழ்ச்சியும், 8.15 மணிமுதல் 8.45 மணிவரை விவேகானந்தா கிராமிய கலைக்குழு நிகழ்ச்சியும், 8.45 மணிமுதல் 10.30 மணிவரை மெட்ராஸ் ஜங்ஷன் இசைக்குழு சாம் விஷாலுடன் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

நிகழ்ச்சியில் சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர ஆணையாளர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், பிரையன்ட் நகர் பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு நெய்தல் கலை விழாவை கண்டு ரசித்து வருகின்றனர்.