தூத்துக்குடியில் 4 ம் ஆண்டு நெய்தல் கலை திருவிழா நேற்று தொடங்கியது. இரண்டாம் நாளான ஜூன் 14 ம் தேதியான இன்று சனிக்கிழமை மாலை 5.45 மணிமுதல் 6.15 மணிவரை தூத்துக்குடி தமிழன்டா கலைக்குழு நிகழ்ச்சியும், 6.15 மணிமுதல் 6.45 மணிவரை அபிநயகீதம் பல்சுவை கலை நிகழ்ச்சியும், நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரும், மேற்கு ஒன்றிய செயலாளருமான சண்முகையா எம்.எல்.ஏ பங்கேற்று கலை நிகழ்ச்சிகளை கண்டு கழித்தார்.

அதைத்தொடர்ந்து 6.45 மணிமுதல் 7.15 மணிவரை குமார ராமன் தேவராட்டம் கலைக்குழு நிகழ்ச்சியும், 7.15 மணிமுதல் 7.45 மணிவரை கொங்கு பண்பாட்டு மையம் நிகழ்ச்சியும், 7.45 மணிமுதல் 8.15 மணிவரை மாலன் மாற்றுத்திறனாளிகள் மல்லர் கம்பம் குழு நிகழ்ச்சியும், 8.15 மணிமுதல் 8.45 மணிவரை விவேகானந்தா கிராமிய கலைக்குழு நிகழ்ச்சியும், 8.45 மணிமுதல் 10.30 மணிவரை மெட்ராஸ் ஜங்ஷன் இசைக்குழு சாம் விஷாலுடன் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.