தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்று காலை முதல் பெய்து வரும் கனமழையால் தாழ்வுப் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணிகள் இடையறாது நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், ஹவுசிங் போர்டு பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வெளியேற்றும் பணிகளையும், திரேஸ்புரம் முகத்துவாரத்தில் கடலுக்கு மழைநீர் வெளியேறும் நிலைமையையும் மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அவருடன் பகுதி கழக செயலாளரும் மாநகர மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான தொ.நிர்மலராஜ், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனி ஆகியோர் மற்றும் கழக நிர்வாகிகள் இணைந்திருந்தனர்.
மழை காரணமாக பொதுமக்களுக்கு எந்தவித சிரமமும் ஏற்படாதபடி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும், நீரேற்ற பணிகள் முழு வேகத்தில் நடைபெறுவதாகவும் மேயர் தெரிவித்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் கனமழை காரணமான நீர்வெளியேற்றப் பணிகள் தீவிரம் – மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் ரத்த தான முகாம்: 35 பேர் நலனுக்காக ரத்தம் தானம் செய்தனர்!!
அடுத்த
சிபிஐ கட்சி கவுன்சிலர் தனலெட்சுமி: மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலர் ஆறுமுகத்திற்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026