தூத்துக்குடி நிஷா பவுண்டேஷன் குடிபோதை மற்றும் மனநிலை சிகிச்சை மையம், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து டி. ஆர். நாயுடு தெருவில் இலவச மருத்துவ முகாம் நடத்தியது. விழாவிற்கு நிஷா பவுண்டேஷன் இயக்குனர் எஸ். முகமது ஷாநவாஸ் தலைமையிட்டு, தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில துணை கொள்கை பரப்பு செயலாளர் ஷாஜகான் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை செயல் தலைவர் பழரசம் பா. விநாயகமூர்த்தி ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார். இதில் மொத்தம் 35 பேர் ரத்த தானம் செய்தனர். நிகழ்ச்சியில் தூத்துக்குடி அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாந்தி. கோ வைதீஸ், மாநகராட்சி சுகாதார குழு தலைவர் எஸ். சுரேஷ் குமார், மத்திய பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் நிஷா பவுண்டேஷன் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.