தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இந்த முகாம்களில் பொதுமக்கள் அளித்த மனுக்கள் ஆன்லைன் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை மக்கள் தாமே சரிபார்க்கலாம் என தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
பதிவேற்ற நிலையை அறிய:
1. voters.eci.gov.in/login இணையதளத்தை அணுகவும்
2. “Fill Enumeration Form” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
3. மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து, Epic Number-ஐ பதிவிடவும்
சமர்ப்பிக்கப்பட்ட விவரம் சரியாக பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தால் “Submitted” எனத் தோன்றும். “ஆதார் படிவத்தை சப்மிட் செய்யவும்” எனத் தொடர்ந்து காட்டினால், BLO இன்னும் உங்கள் மனுவை பதிவேற்றவில்லை என்பதைக் குறிக்கும் என்று மேயர் விளக்கினார்.
இந்த நிலையில், பதிவேற்றம் செய்யப்படாத மனுக்கள் இருந்தால், மாநகராட்சி மத்திய அலுவலகம், மண்டல அலுவலகங்கள், பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்களில் நடைபெறும் தீவிர திருத்த முகாம்களில் அவசியம் கலந்து கொண்டு பயனடைய வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு மக்கள் மேயர் வெளியிட்ட சமூக வலைதள இணைப்பை பயன்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி நகரில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த முகாம்கள் — பதிவேற்ற நிலை ஆன்லைனில் சரிபார்க்கலாம்: மேயர் ஜெகன் பெரியசாமி கேட்டுக்கொள்வது!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி கனமழை பாதிப்பு பகுதிகளில் விரைவான நடவடிக்கை – மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
அடுத்த
தஞ்சாவூர் குப்பை பயோமைனிங் ஒப்பந்தத்தில் பெரும் முறைகேடு! — முன்னாள் கமிஷனர், பொறியாளர்கள், ஒப்பந்ததாரர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026