தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நீர்த் தேக்கத்தை அகற்றுவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதையடுத்து, கோக்கூர் குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பி&டி காலனி, ராஜீவ் நகர், மருத்துவக் கல்லூரி அருகிலுள்ள காமராஜ் நகர் போன்ற பாதிப்பு பகுதிகளில் இருந்து மழைநீர் வடிகால், மின் மோட்டார், பாதாள சாக்கடை வழியாக வெளியேறும் நிலையை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பொதுமக்களின் அசௌகரியத்தைத் தீர்க்க, தேங்கியிருந்த மழைநீர் விரைவாக வெளியேற்றப்பட்டு வருவதாகவும், அவசர கால நடவடிக்கைகள் தாமதமின்றி மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.